அமராவதி ஆற்றங்கரையில் ஆண் சடலம் மீட்பு

கரூர், மார்ச்1: கரூர் அமராவதி ஆற்றங்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. கரூர் பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையோரம் 45வயது மதிப்புடைய ஆண் ஒருவர் இறந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உடனே விஏஒவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் கொடுத்த புகாரின்பேரில் பசுபதிபாளையம் காவல் நிலையத்துக்கு புகார் அளித்தார். இதன் அடிப்படையில், பசுபதிபாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி, அவர் யார்? என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: