கரூர், மார்ச் 1: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் குமார் துவக்க உரையாற்றினார். கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மண்டல செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சாலைப் பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுப்பதை தவிர்த்து அரசே ஏற்று நடத்த வேண்டும். அனைத்து நிலை ஊழியர்களுக்கும், பதவி உயர்வுக்கான தேர்வு பெயர் பட்டியல் உரிய தேதியில் வெளியிடப்பட்டு, முரண்பாடுகள் இல்லாமல் பதவி உயர்வுகள் வழங்க வேண்டும். கோட்டக் கணக்கர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.