கோவில்பட்டி புற்றுக்கோயிலில் மாசி மகம் சிறப்பு பூஜை

கோவில்பட்டி, மார்ச் 1: கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்மாள் புற்றுக்கோயிலில் பவுர்ணமி மாசி மகம் திருவிளக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனையொட்டி காலையில் கணபதி பூஜையுடன் தொடங்கி கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாண முருகன், சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 51 பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜைகள் செய்தனர். சிறப்பு பூஜைகளை சுப்பிரமணிய அர்ச்சகர் செய்தார்.

Related Stories: