டூவீலர் திருட்டு

ஆண்டிபட்டி, மார்ச் 1: ஆண்டிப்பட்டி அருகே உள்ள ரெங்கசமுத்திரத்தை சேர்ந்த ஜெகநாதன் (53), எல்.ஐ.சி ஏஜெண்ட். இவர், நேற்று முன்தினம் மாலை ஆண்டிபட்டியில் உள்ள தேனி-மதுரை மெயின்ரோட்டில் பாலக்கோம்பை பிரிவு அருகே, தனது டூவீலரை நிறுத்திவிட்டு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, டூவீலரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் டூவீலரை காணவில்லை. இது குறித்த புகாரின்பேரில், ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து மாயமான டூவீலர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: