மரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

நெல்லை, மார்ச் 1: திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர் (51). பனைத் தொழிலாளி. கொடுமுடியாறு அணைக்கு செல்லும் வழியில் உள்ள தனது தோட்டத்தில் பனை மரத்தில் பதநீர் இறக்கும் போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த திருக்குறுங்குடி போலீசார், உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories: