நெல்லை மாவட்டத்தில் மது விற்ற 6 பேர் கைது

நெல்லை, மார்ச் 1:  நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள்  எழுந்தன. இதையடுத்து இவ்வாறு சட்டவிரோதமாக பதுக்கிவைத்து மது விற்பனை செய்வோர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு எஸ்பி மணிவண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்திய போலீசார், மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: