முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

உத்தமபாளையம், மார்ச் 1: உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரியில் கடந்த 1985 முதல் 1988 வரை படித்த மாணவர்கள் தனி வாட்ஸ் அப் குழு அமைத்து இணைந்துள்ளனர். பல்வேறு ஊர்களில் பணிபுரியும் இவர்கள் வாட்ஸ் அப் குழு மூலம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் சந்திக்க ஏற்பாடு செய்தனர். இதன்படி அனுமந்தன்பட்டியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் அரசு ஊழியர்கள், வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், காவல்துறையில் பணிபுரிபவர்கள் என 27 பேர் கலந்து கொண்டனர். ஓய்வு பெற்ற பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்டவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க தொழில் அதிபர் குணசேகர் என்பவர் செய்திருந்தார்.

Related Stories: