ஆரல்வாய்மொழி காற்றாடிமலை வியாகுல அன்னை ஆலய தேர் பவனி

ஆரல்வாய்மொழி, மார்ச் 1: ஆரல்வாய்மொழி காற்றாடி மலை தேவசகாயம் மவுண்ட் வியாகுல அன்னை ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலை வியாகுல அன்னை ஆலய  பெரும் விழா கடந்த 19ம் தேதி தொடங்கி  10ம் திருவிழாவான நேற்று தேர்பவனியுடன்  முடிவடைந்தது. விழாவையொட்டி நேற்று காலை 5 மணிக்க  ஜெபமாலை, புகழ்மாலை, 5.30 மணிக்கு திருவிழா திருப்பலி,  7.30 மணிக்கு மலையாளத்திருப்பலி, 9 மணிக்கு திருப்பலி ஆகியவை நடந்தது.  பிற்பகல் 3.30 மணிக்கு தேர்பவனி, மாலை 7  மணிக்கு நற்கருணை ஆசீர்,  இரவு 9.30 மணிக்கு தேவா கலைக்குழுவின் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் ஆகியவை  நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருத்தல அதிபர்  பிரான்சிஸ் சேவியர்,  பங்குத்தந்தை  பிரைட், பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் மைக்கேல், பொருளாளர் சகாயபென்சிகர், பங்கு பேரவை நிர்வாகிகள், அருள் சகோதரிகள், தேவசகாயம் மவுண்ட் வட்டார துணைத்தலைவர் ஜேக்கப்மனோகரன் மற்றும் பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: