நாகர்கோவில், மார்ச். 1: குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், வேளிமலை, குலசேகரம், களியல் வனப்பகுதிகளில், வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி கடந்த 25ம் தேதி தொடங்கியது. மாவட்ட வனஅதிகாரி அசோக்குமார் தலைமையில் ஒரு பீட்டிற்கு 4 பேர் என 26 பீட்களில் 104 தன்னார்வலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கணக்ககடுப்பில் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பு பணி 3 நாட்கள் நடந்தது. கணக்கெடுப்பு பணியின் போது யானை, காட்டுமாடு, மலபார் அணில், கரடி, காட்டுப்பன்றி, மிளா, உடும்பு, செந்நாய், முள்ளம்பன்றி, மரநாய், எறும்புத்தின்னி, கருமந்தி, வரையாடு, கேளையாடு, காட்டு முயல், காட்டு கோழி ஆகியவை நேரில் கண்டறியப்பட்டன. புலி, சிறுத்தைகள், விருது போன்ற மாமிச உண்ணிகளின் எச்சங்கள் கண்டறிப்பட்டுள்ளன.