குறைதீர் கூட்டங்கள் ரத்து

சிவகங்கை, மார்ச் 1: சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சட்டமனற் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதையடுத்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வரை மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கல், திட்டப்பணிகள் துவக்குதல் போன்ற அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. பொதுமக்கள் அவசர நலன் கருதி மனு அளிப்பதாக இருந்தால் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெறுவதற்கான பெட்டியில் மனுக்களை வைக்கலாம்.

Related Stories: