திருப்புவனம், மார்ச் 1: திருப்புவனம் அருகே கழுவன்குளத்தை சேர்ந்தவர் முருகன் மகன் விக்னேஷ்பாண்டி(20). இவரது மனைவி நிவேதா(18). ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன் மதுரையில் பெற்றோர் வீட்டிற்கு சென்ற நிவேதா தற்கொலை செய்து கொண்டார். இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த விக்னேஷ்பாண்டி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.