வேளாண்மை கல்லூரி பட்டமளிப்பு விழா

காரைக்குடி, மார்ச் 1:  காரைக்குடி அருகே விசாலயன்கோட்டை கலாம்கவி கிராமம் சேதுபாஸ்கரா வேளாண்மைக்கல்லூரி முதலாம் பட்டமளிப்பு விழா மற்றும் விருது வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சேதுகுமணன் துவக்கி வைத்தார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், ‘‘கல்வியால் மட்டுமே தேசத்தை உயர்த்த முடியும். நாம் கற்ற கல்வி சமூகத்திற்கு பயன்பட வேண்டும்.

விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு மாணவர்களின் படிப்பு உதவ வேண்டும்’’ என்றார். சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.   நிகழ்ச்சியில் விலாஸ் விஷ்ணு ஷின்டே, ஜிவிகே.நாயுடு, புவனாராஜேஸ்வரன், முகமது எகியா, கோகிலம்சேதுகுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இயக்குநர் கோபால் நன்றி கூறினார்.

Related Stories: