சிங்கம்புணரி, மார்ச் 1: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிங்கம்புணரியில் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பாக பாரம்பரிய நாட்டு மரக் கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு திமுக மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பூமிநாதன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் யாகூப் வரவேற்றார். விழா ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் பூரண சங்கீதா செய்திருந்தார். இதில் பொதுமக்களுக்கு நாட்டு மரக் கன்றுகளான நாவல், வேங்கை, மா, புங்கை, தென்னை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.