பழநி, மார்ச் 1: கோயில் நகரான பழநிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழநி வரும் பக்தர்களுக்கு தரிசன வசதி செய்து தருவதற்காக கோயில் நிர்வாகத்தால் கைடுகள் யாரும் நியமிக்கப்படவில்லை. மாறாக, பஸ் நிலையம், தண்டபாணி நிலையம், கோயில் தலைமை அலுவலகம், மலைக்கோயில் உள்ளிட்ட இடங்களில் கணிணி வசதியுடன் கூடிய தகவல் மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பூஜை நேரங்கள், தரிசன டிக்கெட் விபரங்கள், ரோப்கார் மற்றும் வின்ச் கட்டண விபரங்கள், தங்குமிட தகவல்கள், அருகில் உள்ள மற்ற கோயில்களின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், பழநி நகரில் பலர் தங்களை கைடுகள் என்று கூறிக்கொண்டு வரும் பக்தர்களிடம் பணம் பறித்து வருகின்றனர்.