வால்பாறை, மார்ச். 1: தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வால்பாறையில் பல்வேறு நிகழ்சிகளில் நேற்று பங்கேற்றார். அதன் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிர் இழந்த வியாபாரிகளின் குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் வழங்வேண்டும். அனைத்து வகையிலும் அரசு வியாபாரிகளை புறம் தள்ளி உள்ளது. பேரிடர் காலத்தில் உள்ளாட்சி மற்றும் அறநிலையத்துறை வசம் உள்ள கடைகளின் வாடகை 6 மாத காலத்திற்கு ரத்து செய்ய கோரிக்கை வைத்தோம். வணிகர் நல வாரியம் முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும். தற்போது விலைவாசி கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரி சுமையும் அதிகம் ஏற்படுகிறது.