பொள்ளாச்சி, மார்ச் 1: பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள திமுக அலுவலகத்தில் நேற்று, நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு செயலாளர்கள் மற்றும் வாக்குசங்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் வடுகை பழனிசாமி தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர்கள் கார்த்திகேயன், விஜயா, நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் வரவேற்றார். இதில், மாநில விவசாய அணி துணை தலைவர் தமிழ்மணி கலந்துகொண்டு, வாக்குச்சாவடி முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பேசினார். வழக்கறிஞர் அணி மருதராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கவுதமன், தர்மலிங்கம், கண்ணன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மாணிக்கராஜ், தர்மராஜ், சாந்துமுகமது, சார்பு அணி நிர்வாகிகள் நவநீதகிருஷ்ணன், அப்துல்சத்தார், நிஜாமுதீன், ரஞ்சித், விஜயகுமார், திருமலைராஜா, சதீஸ் தொழிற்சங்க செயலாளர் கண்ணசாமி, பாத்திமாஅக்பர், ஆகி மூர்த்தி, சிவக்குமார், வட்ட செயலாளர்கள் பழனிசாமி, ஜெய்லாப்தீன், கரியாம்பட்டி செல்வராஜ், ராஜசுதாகர், ராஜன், வடிவேலு, ஸ்வீட் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.