திருச்செங்கோட்டில் நாளை மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
திருச்செங்கோடு, மார்ச் 1: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் நாளை(2ம் தேதி) நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம், திருச்செங்கோடு சிஎச்பி காலனியில் உள்ள அலுவலகத்தில் நாளை(2ம் தேதி) காலை 10 மணிக்கு மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.