வாலிபரை தாக்கிய மாணவர் உள்பட 3 பேர் அதிரடி கைது

ராசிபுரம், மார்ச் 1: ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே, தினேஷ்குமார்(30) என்பவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவர் ராகேஷ் என்பவரிடம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அவர் திரும்ப கேட்டதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதில், தினேஷ்குமாருடன் அவரது நண்பர்களான ராசிபுரத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் மற்றும் மல்லூரைச் சேர்ந்த சின்ராஜ்(31) ஆகியோர் சேர்ந்து  ராகேஷை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து ராகேஷ் அளித்த புகாரின்பெயரில், ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, மூவரையும்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: