ஊட்டி,மார்ச்1:தமிழ்நாடு ஆதி தொல்குடி பழங்குடியினர் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் ஊட்டியில் உள்ள என்.சி.எம்.எஸ் மண்டபத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு பழங்குடியினர் கூட்டமைப்பு அமைப்பாளர் அழகியநம்பி தலைமை வகித்தார். ஆதிபழங்குடியினர் நல சங்க பொது செயலாளர் குமார், படுக தேச பார்டி தலைவர் மஞ்சை மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தமிழக அரசின் பரிந்துரைைய ஏற்று மத்திய அரசு அரசாணை வெளியிட வேண்டும்.