சாலை விபத்தில் ஒருவர் பலி

உத்திரமேரூர், மார்ச் 1: உத்திரமேரூர் அடுத்த மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (35) கார் ஓட்டுநர். இவர் நேற்றுமுன்தினம்   கடையில் பொருள் வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் மங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டியாம்பந்தல் கூட்டுசாலை அருகே வந்தபோது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், அசோக்குமார் தலையில் பலத்த காயமடைந்தார்.அப்பகுதி மக்கள் அசோக்குமாரை மீட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அசோக்குமார்  உயிரிழந்தார். தகவலறிந்து  வந்த  உத்திரமேரூர் போலீசார் அசோக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: