புகையிலை விற்ற பெண் கைது

சின்னமனூர், மே 6: சின்னமனூர் காவல் நிலைய எஸ்ஐ முஜிப் ரகுமான் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். சின்னமனூர் அருகே முத்தலாபுரம் பட்டறை தெருவில் முருகானந்தம் மனைவி செல்வி(56) என்பவரது பெட்டிக்கடையில் போலீசார் சோதனையிட்டனர்.

இதில் அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த போலீசார் செல்வியை கைது விசாரித்து வருகின்றனர்.

 

 

Related Stories: