மன்னார்குடி, பிப்.26: மன்னார்குடி அருகே வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் தூக் கிட்டு இறந்த சம்பவத்தில் கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருவாரூர் மாவட்டம் சேரன்குளம் கிராமத்தை சேர்ந்த தம்பதிகள் தமிழ்வேந்தன்(28), சரண்யா(24). இருவரும் வெளிநாட்டில் வசித்து வந்த நிலையில் கொரோனா முடக்கம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துவிட்டனர். இந்நிலையில் வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் சரண்யாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரண்யா மன்னார்குடியில் உள்ள தனது தந்தை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கைப்பட கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.