பக்தர்கள் திரண்டனர் பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற் சங்கம் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, பிப். 26: தஞ்சை டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நடைபெற்றது. டாஸ்மாக் அனைத்து சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, வீரய்யன், கோடீஸ்வரன், வினோதன், ராஜசேகரன் ,வேல்முருகன் தலைமை வகித்தனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார், சிஐடியூ மாநில செயலாளர் ஜெயபாலன், எல்பி எஃப் மாவட்ட செயலாளர் சேவியர் ஆகியோர் பேசினர். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். விற்பனை நேரத்தை குறைத்து பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் அன்பு, ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லை வனம், முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் பேர்நீதி ஆழ்வார், ஏஐடியூசி மாநில துணை தலைவர் துரை. மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் டாஸ்மாக் பணியாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Related Stories: