மகாமக குளத்தில் நீராட அனுமதியில்லை

கும்பகோணம், பிப்.26: மாசிமகத்தையொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் இன்று (26ம்தேதி) தீர்த்தவாரியின் போது பக்தர்கள் புனிதநீராட அனுமதியில்லை என தஞ்சாவூர் எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் தெரிவித்தார். கும்பகோணத்தில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய் குளக்கரையில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மகாமக குளம் அருகே வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு 6 இடங்களில் வாகனங்கள் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளக்கரையில் நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் குளத்தில் பக்தர்கள் புனித நீராட அனுமதியில்லை என்றார்.

Related Stories: