தா.பழூர், பிப்.26: தா.பழூர் வட்டாரத்தில் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் விக்கிரமங்கலம் கிராம விவசாயிகளுக்கு, நிலைக்கத்தக்க மானாவாரி வளர்ச்சி இயக்கம் திட்டம் குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை உதவி இயக்குநர் அசோகன் அவர்கள் தலைமை வகித்து கோடை உழவு செய்வதன் அவசியம் குறித்தும், இந்த பகுதிக்கு ஏற்ற கடலை விதை ரகங்கள் குறித்தும், அதன் மகசூல் பண்புகள் குறித்தும் எடுத்துக் கூறினார். மேலும், விதை நேர்த்தி செய்வதால் விதை மூலம் பரவும் பூஞ்சாண நோயினை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.