நாகை, பிப். 26: பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்கள் தொமுச வீரபாண்டியன், ஏஐடியூசி சிவதாஸ், சிஐடியூ சிவக்குமார், தொழிலாளர் விடுதலை முன்னணி கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியூசி மாவட்ட செயலாளர் மகேந்திரன், சிஐடியூ மாவட்ட செயலாளர் சிவனருட்செல்வன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம், பணிவரன், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும். தமிழக அரசின் நிதி வருவாயில் 5ல் 1 பங்கு வருவாயை மதுபானம் மூலம் ஈட்டி தரும் பணியில் உள்ள ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.