குளத்தூர், பிப்.26: தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் லாரி மோதி சிறுவன் பலியானான். தூத்துக்குடி தாளமுத்து நகர் சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்த செட்டிபெருமாள் மகன் மணியரசன்(25). இவரது சகோதரர் ஆறுமுகம்(15). இருவரும் தருவைகுளத்தில் மீன்பிடித் தொழில் வேலைக்கு சென்று வந்தனர். நேற்று காலை வேலைக்கு பைக்கில் சென்றனர். தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்தபோது பைக் நிலை தடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர்.