தென்காசி, பிப். 26: தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வீடுகளை உடைத்து தொடர் திருட்டுகள் அரங்கேறின. இதையடுத்து எஸ்பி சுகுணாசிங் உத்தரவின் பேரில், டிஎஸ்பி கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ மாரிமுத்து, ஏட்டுகள் கோபி, ஜோஸ் முத்தையா பாண்டியன், வடிவேல்முருகன், கருப்பசாமி, முருகன், அருள்ராஜ், அலெக்ஸ், சீவலமுத்து, முத்துக்குமார், கார்த்திக் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் தென்காசியில் தனிப்படையினர் ரோந்து சென்ற போது சந்தேகத்தின் பேரில் வாலிபரை ஒருவரை பிடித்து விசாரித்தனர்.