×

சேரன்மகாதேவியிலும் போராட்டம்

வீரவநல்லூர்:  சேரன்மகாதேவி தெற்குநாலாந்தெரு அருகே 3 ஆண்டுக்கு முன் ஆளில்லா ரயில்வே கிராசிங் அகற்றப்பட்டு சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் இந்த பாதையில் தண்ணீர் ஊற்று அடிப்பதால் அவ்வழியாக மக்கள் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து சுரங்க பாதையில் பணிகள் நடந்து வந்தன.
 
இந்நிலையில் நேற்று அப்பகுதிக்கு ஜேசிபி இயந்திரத்துடன் சென்ற ரயில்வே ஊழியர்கள், தற்காலிக வழிப்பாதையை மூடுவதற்கு ஆயத்தமாகினர். இதையறிந்த திரண்ட மக்கள், ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சேரன்மகாதேவி எஸ்ஐ சிவதாணு மற்றும் ரயில்வேத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நிரந்தர நடவடிக்கை எடுத்த பிறகுதான் தற்காலிக பாதையை மூட வேண்டும் என வலியுறுத்தினர். இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் பணிகள் நிறுத்தப்பட்டு நாளை(இன்று) காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இதையேற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Serenmagadeva ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ