காடையாம்பட்டி, பிப்.26: காடையாம்பட்டி, வேளாண்மை துறை சார்பில், விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். காடையாம்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள், நீடித்த நவீன கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காக, உள் மாநில அளவிலான பயிற்சிக்கு கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் காடையாம்பட்டி வேளாண் அலுவலகத்தில் இருந்து உதவி இயக்குனர் நாகராஜ் வழியனுப்பும் போது ஒரு பருவ நாற்று மூலம் கரும்பு நடவு தொழில்நுட்பங்களில் கரும்பு நடவு, மண் அணைத்தல், சோகை உரித்தல், சொட்டுநீர், உரப்பாசனம் ஒருங்கிணைந்த உரம் பூச்சி மற்றும் நோய்கள் நிர்வாகம் அறுவடை பின் செய்நேர்த்தி குறித்த பயிற்சி பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.