சேலம், பிப்.26: சேலம் மாவட்டத்தில் 19,632 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சேலத்தில் சுகாதார பணியாளர்கள், போலீசார், வருவாய்துறை மற்றும் உள்ளாட்சி துறையை சேர்ந்தவர்கள் என 40,521 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை19,632 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் 4,456 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.