ஓமலூர், பிப்.26: ஓமலூர் அருகே பாலகுட்டப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதாட்ட விழா நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாலகுட்டப்பட்டியில் மாரியம்மன் கோயில் திருவிழா, 3 நாள் நடந்தது. விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் கலந்துகொண்ட எருதாட்டம் நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. பல்வேறு மாவட்டங்ளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் காளைகளை அழைத்து வந்து கோயிலை சுற்றியும், மைதானத்தில் ஓட விட்டு எருதாட்டம் நடத்தினர்.