நாமக்கல், பிப்.26: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா தடுப்பு பணி மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு கல்லூரியை திறக்கும் வகையில் பணிகள் நடைபெறுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இதற்கான அறிக்கை சுகாதாரத்துறை செயலாளரிடம் சமர்ப்பிக்கப்படும்.