தர்மபுரி, பிப்.26 : தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியராக்க வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியர்கள் 4வது நாளாக நேற்று கும்மியடித்து பாடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்ட அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், அரசு ஊழியராக்க வேண்டும் என வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகம் அருகே 4வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.