×

பள்ளி மாணவி மாயம்

தர்மபுரி,  பிப்.26: பாப்பாரப்பட்டி பாடி கிராமத்தை  சேர்ந்தவர் தர்மன். இவரது மகள்  கலைச்செல்வி (18). இவர், பிளஸ்2 முடித்து  விட்டு வீட்டில் இருந்து  வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 21ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்றவர்  வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து அவரது  பெற்றோர் அளித்த புகாரின்  பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா