×

அறுவடைக்கு தயாரான துவரை

அரூர், பிப்.26: அரூர் பகுதியில் துவரை பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.அரூர் பகுதியில், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், கம்பைநல்லூர், இருமத்தூர், கோட்டப்பட்டி, தீர்த்தமலை, நரிப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் துவரை பயிரிட்டுள்ளனர். நிலக்கடலை, மஞ்சள் உள்ளிட்டவற்றில் ஊடு பயிராகவும், புன்செய் பயிராகவும் துவரை பயிரிடப்படுகிறது. 6 மாத கால பயிரான இது, தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. அவ்வப்போது பெய்த மிதமான மழை, துவரைக்கு ஏற்ற சீதோஷ்ண நிலையாக அமைந்ததால், விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா