ஒகேனக்கல் காவிரியில் டைவ் அடித்த வாலிபர் பலி

தர்மபுரி,  பிப்.26: ஒகேனக்கல் கோட்டை கோயில் தெருவை  சேர்ந்தவர் தண்டபாணி மகன்  தமிழரசன் (25). தனியார் பஸ் டிரைவரான இவர், கடந்த 23ம் தேதி தனது  நண்பர்களுடன், ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளார். சின்னாறு-காவிரி  ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது, டைவ் அடித்து குதித்துள்ளார். அப்போது  அங்குள்ள பாறையில் மோதி, பலத்த காயமடைந்தார். அவரது நண்பர்கள் அவரை மீட்டு,  தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக  சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழரசன், சிகிச்சை பலனின்றி  நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து, ஒனேக்கல் போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: