பந்தலூர், பிப்.26: பந்தலூரில் முகாமிட்டிருந்த மக்னா யானையை வனத்துறையினர் போராடி வனப்பகுதிக்குள் விரட்டினர். பந்தலூர் அருகே உப்பட்டி புஞ்சவயல் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்ட பகுதியை ஒட்டிய வனப்பகுதியில் நேற்று முன்தினம் மக்னா யானை ஒன்று முகாமிட்டது. அதை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில் நேற்று காலை அந்த யானை பந்தலூர் பஜாரை ஒட்டிய பகுதியான மேங்கொரேஞ், அட்டி வயல், கல்லட்டி, செம்மண்வயல், கூவமூலை உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில் அதிகாலை நுழைந்ததால் பொது மக்கள் பீதி அடைந்தனர்.