இன்று (மே 2) உங்களின் செல்ஃபோன்களுக்கு அதிக சத்தத்துடன் மெசேஜ் வந்தால் அது குறித்து யாரும் பயப்பட வேண்டாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மழை வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை எச்சரிப்பதற்கான Cell Broadcast சேவையை இன்று நாடு முழுவதும் சோதனை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
