சத்தியமங்கலம், பிப்.26: ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள வாரச்சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் சின்ன வெங்காயம் மற்றும் நடவுக்கு தேவையான விதை வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் நேற்று புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு 800க்கும் மேற்பட்ட விதை வெங்காயம் மூட்டைகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடந்த இரண்டு வாரங்களாக கிலோ ரூ.170 வரை விற்ற விதை வெங்காயம் நேற்று விலை குறைந்து கிலோ ரூ. 80 முதல் 90 ரூபாய் வரை விற்பனையானது.