×

தெலுங்கானாவில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் வந்த 1,300டன் புழுங்கல் அரிசி

ஈரோடு,பிப்.26:  தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஈரோட்டிற்கு ரயிலில் 1,300 டன் புழுங்கல் அரிசி வந்தது. தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அரிசி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட மக்களுக்கு பொதுவிநியோக திட்டத்தில் விநியோகிப்பதற்காக தெலுங்கானா மாநிலம் கரிம் நகர் பகுதியில் இருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 1,300 டன் புழுங்கல் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

இந்த அரிசி மூட்டைகள் தெலுங்கானாவில் இருந்து 21 பெட்டிகள் கொண்ட தனி சரக்கு ரயிலில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்செட்டிற்கு வந்தடைந்தது. இந்த அரிசி மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, ஈரோடு பவானி ரோட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : Telangana ,Erode ,
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...