ஈரோடு,பிப்.25: ஈரோடு பெருந்துறை ரோட்டில், ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் அருகில் அரவிந்த் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். முகாமில் புற்றுநோய் நிபுணர் டாக்டர் சுதாகர்ரமீஸ்ராஜா டாக்டர்கள், பரகத்துல ரேஷ்மா, ஜெயசங்கர், ஜெயபால், ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். இதில், ரத்த பரிசோதனைகள், இ.சி.ஜி.பரிசோதனை ஆகியன இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.