செய்யாறு, பிப்.26: கிராமப்புறங்களில் பயோகாஸ் ஊக்கப்படுத்த வேண்டும் என செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் முன் மாட்டு சாணம் தெளித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அலுவலக வாயிலில் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தினர் வருகிற சட்டமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் பயோ காஸ், பயோ டீசல் எத்தனால் திட்டங்களை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாட்டு சாணம் தெளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாய சங்க பிரதிநிதி புருஷோத்தமன் கூறுகையில், ‘கிராம பொருளாதாரம் உயர இயற்கை எரிவாயு சிலிண்டருக்கு மாறாக பயோகாஸ் உர தயாரிப்பு கலன் என்.ஆர்.இ.ஜி.எஸ் திட்ட நிதி மூலம் ₹10 ஆயிரம் வழங்க வேண்டும். இதனால் ஆண்டுக்கு ₹8,000 முதல் ₹10,000 வரை கிராமப்புற மக்கள் சேமிக்க முடியும். மேலும் 2006 முதல் 2015 வரை பயோ டீசல் தயாரிக்க காட்டாமணக்கு சாகுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டது.