×

சிறப்பு எஸ்ஐ மயங்கி விழுந்து சாவு

வத்திராயிருப்பு, பிப்.26: போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அருப்புக்கோட்டை 7 வது தெரு, தேவாடெக்ஸ், காந்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து(48). போக்குவரத்து பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வத்திராயிருப்பில் இருந்து தாணிப்பாறை செல்லும் வழியில் தனியார் சித்த மருத்துவமனையில் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு மாரிமுத்துவை கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவருடைய உடல் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இது சம்மந்தமாக வத்திராயிருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.



Tags :
× RELATED குளச்சல் அருகே மீன்பிடித் தொழிலாளியிடம் செல்போன் திருடியவர் கைது