×

விதி மீறிய பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்கு

சாத்தூர், பிப்.26: சாத்தூர் அருகே குழந்தை தொழிலாளர்களை வைத்து வேலை வாங்கிய பட்டாசு ஆலை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே கோட்டைப்பட்டியில் இருந்து அச்சங்குளம் செல்லும் ரோட்டில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நேற்று பனையடிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் தாழம்பூராஜா அந்த ஆலையை சோதனையிட சென்றார். அப்போது அதில் 11 வயது சிறுமி வேலை செய்து கொண்டிருந்தார். மேலும் ஆலையில் உரிய அனுமதியின்றி எளிதில் தீப்பற்றி வெடிக்ககூடிய பேன்சி ரக வெடிகளை தயார் செய்ததாக தெரிகிறது. இது குறித்து ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் படி கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்தார். புகாரின் படி ஏழாயிரம்பண்ணை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆலை உரிமையாளர் விஜயகரிசல்குளத்தை சேர்ந்த சுப்புக்கனி மீது வழக்குபதிவு செய்தார். ஆலையில் இருந்து மிசின் திரி கட்டு ஒன்று, பேன்ஸி ரக மணி மருந்துகள், 30 சாட் முழுமையடைந்த அட்டை பெட்டி ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு