×

தாலுகா அலுவலகத்தில் நில உரிமையாளர் ஆலோசனை கூட்டம்

திருவில்லிபுத்தூர், பிப்.26: நான்குவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை நான்குவழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆவணங்கள் சரிபார்ப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) அனிதா தலைமை வகித்தார்.இதில் திருவில்லிபுத்தூர் தெய்வேந்திரி, அத்திகுளம், செங்குளம், பூவாணி, முத்து வெங்கட்ராயபுரம், நலிங்கபேரி ஆகிய பகுதிகளின் நில உரிமையாளர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நில உரிமையாளர்கள் தங்களிடமுள்ள பட்டா அடங்கல் உட்பட பல்வேறு ஆவணங்களை கொண்டு வந்தனர். மேலும் நிலம் எடுத்தது தொடர்பாக தங்களுக்கு உள்ள சந்தேகங்களை அதிகாரிகளிடம் கேட்டனர். அதிகாரிகளும் அவர்களுக்கு நிலம் தொடர்பாக ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர். ஆலோசனை கூட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Taluka Office ,
× RELATED ஈரோடு தாலுகா ஆபீஸ் வளாகத்தில்...