×

டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்

விருதுநகர், பிப்.26: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம் நடத்தினர். விருதுநகர் கலெக்டர் அலுலகத்தில் டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கன்வீனர் குணசேகரன் தலைமையில் கூட்டு நடவடிக்கை குழு தங்கபாண்டி, ஜெகதீஸ்குமார், ரமேஷ் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக வேலை செய்து வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம், பணி வரன்முறை, மாற்றுப்பணி, விற்பனை பணி நேரம் குறைப்பு, வாரிசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் பங்கேற்று கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி அழகிரிசாமி, எல்பிஎப் அண்ணாதுரை, சிஐடியு தேவா உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

Tags : Tasmac ,
× RELATED மறைமலைநகர் அருகே டாஸ்மாக் பாரில்...