மத்தியப்பிரதேசம்: மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணைப் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். படகு கவிழ்ந்ததில் 15 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 12 பேரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் படகுசவாரி சென்றபோது ஏற்பட்ட விபத்தில் பேர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
