புதிய ஊழியர்களை எடுக்க ஏற்பாடு

கம்பம், பிப். 26: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஓட்டுனர், நடத்துனர் லைசென்ஸ் உள்ளவர்களை தற்காலிகமாக வேலையில் சேர போக்குவரத்து அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கம்பத்தில் உள்ள தமிழ் நாடு அரசுப்போக்குவரத்து கழக பணிமனை1 மற்றும் இரண்டில் மொத்தம் 103 நகர் மற்றும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் நேற்று போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 55 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் கம்பம் பணிமனை அதிகாரிகள் ஓட்டுனர், நடத்துனர் உரிமம் உள்ளவர்கள் கம்பம் கிளையை அணுகினால் அவர்களை தினசரி சம்பள அடிப்படையில் தற்காலிக ஊழியர்களாக பணியில் அமர்த்தப்படுவார்கள் என கூறினர்.

Related Stories: