பொன்னேரி, பிப்.26: வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட்