வட சென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்

பொன்னேரி, பிப்.26: வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் பழுது காரணமாக நிறுத்தப்பட்ட 210 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதலாவது நிலையில் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட்

மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் முதல் நிலையில் உள்ள மூன்றாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுது சரிசெய்யப்பட்டு தற்போது அந்த அலகில் மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: